பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய சமூக சேவகி திருமதி கார்த்திகை செல்வி மாரிமுத்து…!

பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கிய சமூக சேவகி கார்த்திகை செல்வி…!


மதுரை, ஜூன் 3:


மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி கார்த்திகை செல்வி, கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களின் நலனுக்காக பல்வேறு சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் பொதுமக்களின் பாராட்டுகளையும் நன்றியையும் பெற்று வருகிறார்.


சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி மேம்பாடு மற்றும் மனிதநேய சேவைகளை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் கார்த்திகை செல்வி, குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் மஞ்சப்பை வழங்கும் விழிப்புணர்வு இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான மஞ்சப்பைகளை இலவசமாக வழங்கியுள்ளார்.


அதேபோல், பசுமைப் புரட்சியை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். பள்ளிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து மரக்கன்றுகள் நடுதல் மற்றும் அவற்றை பராமரிக்கும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இந்த முயற்சிகள் பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளன.


கல்வி துறையிலும் தனித்துவமான சேவைகளை செய்து வரும் கார்த்திகை செல்வி, பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக கல்வி உதவித்தொகைகள் வழங்கி வருகிறார். மேலும் ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்திலும் ஏழை,எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஐந்து ஆண்டுகளாக இடைவிடாது நடைபெற்று வரும் இந்த சேவைகள், பல மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் அவரது மனிதநேயப் பணிகளை பாராட்டி வருகின்றனர்.


இந்நிலையில், நேற்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியிலும் சமூக சேவகி கார்த்திகை செல்வி, ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி அவர்களை ஊக்குவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


நிகழ்வில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் சோலை எஸ். பரமன் உடனிருந்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதையும், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக இதுபோன்ற சமூக சேவைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.


சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாடு ஆகிய மூன்று துறைகளிலும் தொடர்ந்து சேவையாற்றி வரும் கார்த்திகை செல்வியின் பணிகள், பல இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அவரது மனிதநேய சேவைகள் வருங்காலங்களிலும் மேலும் பலருக்கு பயனளிக்க வேண்டும் என பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *