மதுரை பாத்திமா நகர் அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோவில் 64-ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்
மதுரை மே
மதுரை பை.பாஸ் ரோடு பாத்திமா நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசாமி திருக்கோவில் 64-வது மணிவிழா ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை, சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சி.பி.சி.ஐ.டி உதயகுமார், பெட்கிராட் நிர்வாக இயக்குனரும் முன்னாள் கவுன்சிலருமான எம்.சுப்புராமன், மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி, திலகர் திடல் ஏ.சி.பி பழனிச்சாமி, கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார், வடக்கம்பட்டி VPM பட்டாசு கம்பெனி உரிமையாளர் துரைப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் பொன்னையா, செயலாளர் பொன்ராஜ், பொருளாளர் சங்கர் மற்றும் விழா அமைப்பாளர்கள் அந்தோணி முத்துராஜ், ஆனந்தகுமார், பழனிச்சாமி, சொக்கர், சண்முகம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த மாபெரும் அன்னதானத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
