மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் அவர்கள், செல்லூர் கட்டபொம்மன் நகர் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
வடக்கு 2-ஆம் பகுதி கழகச் செயலாளர் வி.கணேசன், 26-வது கிழக்கு வட்டக்கழக செயலாளர் வேல்மணி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி, மதுரை மண்டல செயலாளர் நாகராஜ் தேவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
