திருப்பூரில் வடக்கு சட்டமன்ற தொகுதி, சிறுபூலுவபட்டி பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பூத்
அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
மதுரை ஜூலை 31
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக, வடக்கு சட்டமன்ற தொகுதி, சிறுபூலுவபட்டி பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச்செயலாளர் திருப்பூர் சுற்றுப்பயணம் வருகை குறித்தும்,
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து
தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது குறித்தும், ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலிட பார்வையாளர் செ.தாமோதரன் எம்எல்ஏ பூத் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
சிறுபூலுவபட்டி பகுதி கழக செயலாளர் தங்கராஜ் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்வில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசாமி, மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர், பூலுவபட்டி பாலு, பகுதி கழக செயலாளர்கள் கருணாகரன், ஹரிஹர சுதன், நாச்சிமுத்து, மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட மகளிரனி செயலாளர் திருமதி.சுந்தராம்பாள்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி மைதீன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் சதிஷ், பகுதி கழக அவைத்தலைவர் மணி,வட்ட கழக செயலாளர்கள் ரவி,கார்த்திகேயன், மாணிக்கம், ஆறுமுகம், பகுதி கழக துணைச்செயலாளர்கள் சின்னச்சாமி, திருமதி.வாணி, வழக்கறிஞர்கள் அருள்ஜோதி,சிவாஜி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கார்த்தி, மாவட்ட மீனவரனி துணை செயலாளர் தங்கவேல்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ராஜ்குமார். மற்றும் மாவட்ட, பகுதி, வார்டு, கழக நிர்வாகிகள், பூத் கிளை செயலாளர்கள், பாக நிலை முகவர்கள் (BLA-2), சார்பு அணி நிர்வாகிகள், பங்கேற்று சிறப்பித்தனர்.
