
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஆய்வு கூட்டம்
மதுரை ஜூலை 29
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக் குழுத் தலைவர் பரந்தாமன் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், குழு உறுப்பினர்களாகிய சரவணன் கலசபாக்கம், திருமதி.க.சிவகாமசுந்தரி கிருஷ்ணராயபுரம், கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம் தனி செ.முருகேசன் பரமக்குடி தனி,மா.செந்தில்குமார் கள்ளக்குறிச்சி தனி, தமிழ்செல்வம் ஊத்தங்கரை தனி, அ.நல்லதம்பி கங்கவல்லி ராஜமுத்து வீரபாண்டி, பொன்.ஜெயசீலன் கூடலூர், ராஜகுமார் மயிலாடுதுறை முன்னிலையில் நடைபெற்றது.
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி. அய்யப்பன் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி வானதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
