மதுரை மாநகர் வடக்கு 02-ம் பகுதி, 26-வது வட்டக்கழகம் மருதுபாண்டியர் நகரில் பகுதி செயலாளர் வி.கணேசன் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ இனிப்புகளை வழங்கினார்
மதுரை ஜன 21
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக வடக்கு 2-ம் பகுதிகுட்பட்ட மருதுபாண்டியர் நகரில்,பகுதி கழக செயலாளர் வி.கணேசன் முன்னிலையில், 26-வது வடக்கு வட்டக்கழக செயலாளர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்கள், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், வி.பி.ஆர். செல்வகுமார், கே.ஜெயவேல் மற்றும் பகுதி நிர்வாகிகள்
எஸ்.முருகன், எஸ்.கே.எஸ் முத்துக்குமார், எஸ்.ரவி, என்.பாண்டிச்செல்வம், எம்.தினேஷ்குமார் மற்றும் வட்டக்கழக செயலாளர்கள் ஏ.ஆர்.வேல்மணி, பீ.பீ.குளம் மகேந்திரன், எம்.ஜி.ஆர் ஹோட்டல் கண்ணன், எம்.பாண்டித்துரை, எம்.சிவா மற்றும் கருப்பையா,ராஜா, முத்துப்பாண்டி, ஆனந்த்,எம்ஜிஆர் கண்ணன், மாயக்கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
