ஜெருசலேம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா
மதுரை ஆகஸ்ட் 15
மதுரை மாவட்டம் மேலபனங்காடி பகுதியில் உள்ள ஜெருசலேம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா பள்ளியின் தாளாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்டார் குரு கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும் பள்ளி மாணவர்களின் நாட்டுப்புற நடனம், சிலம்பம், ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுக்களும், மழலையரின் தேச தலைவர்களின் உருவ அணிவகுப்பம் காண்போரை கொள்ளை கொள்ள செய்தது.
