ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவிலில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவன ஸ்டார் குரு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
மதுரை ஆகஸ்ட் 02
மதுரை தத்தனேரி மேலகைலாசபுரம் அருகே வைகை வடகரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவில் 62 ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட “நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை” நிறுவனர் “ஸ்டார் குரு” அவர்கள் தொடங்கி வைத்தார்.
முன்னதாக கோவில் விழா குழுவினர் சார்பாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
