மதுரை மாநகர் வடக்கு 2-ஆம் பகுதியில் எஸ்.ஐ.ஆர் பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு
மதுரை நவ 17
மதுரை மாநகர் வடக்கு 2-ஆம் பகுதி 26,32,15 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், (எஸ்.ஐ.ஆர்) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்களை விநியோகிக்கும் பணிகளை, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.
இதில் நிர்வாகிகள் அண்ணாதுரை, ஜெ.ராஜா, பா.குமார், ஜெயவேல், வி.பி.ஆர். செல்வகுமார், கவுன்சிலர் சொக்காயி, வடக்கு 2-ஆம் பகுதி செயலாளர் வி.கணேசன், பகுதி தலைவர்கள் முருகன், முத்துக்குமார், பாண்டிச்செல்வம், தினேஷ்குமார், வட்டக் கழகச் செயலாளர்கள் பால்பாண்டி, பாண்டித்துரை, வேல்மணி, பீ.பி.குளம் மகேந்திரன், எம்.சிவா, எம் ஜி ஆர் ஹோட்டல் கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
